ஒரு கோடியே 31 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருள் பறிமுதல்

கங்கார், ஜூன்.02-

பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டு போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடித்தது மூலம் இரண்டு வெவ்வேறு இடங்களில் 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இந்த இரு சோதனைகளிலும் மொத்தம் 365 எடைகொண்ட ஷாபு வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பெர்லிங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

முதல் சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் 17 கோணிப் பைகளில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து பிரஜையான 30 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS