கோலாலம்பூர், ஜூன்.02-
கோலாலம்பூர், பங்சாரில் உள்ள மதுபான விடுதிக்குச் சென்ற பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் கடந்த மே 27 ஆம் தேதி முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
25 வயது ஜோர்டன் ஜோன்சன் டோய்ல் என்ற அந்த பிரிட்டிஷ் ஆடவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரும் தங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அந்த இளைஞரின் பெற்றோர் தெரிவித்ததாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் பங்சாரில் உள்ள ஹீலி மேக்’ஸ் ஐரிஷ் மதுபான விடுதிக்குச் செல்வதாகக் கூறி சென்றவர், பின்னர் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மென்பொருள் பொறியிலாளரான அந்த வெளிநாட்டவர், தனியொரு நபராக தென்கிழக்காசிய சுற்றுலாப் பயணத்தில் ஒரு பகுதியாக மலேசியாவுக்கு வந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.