உணவருந்தி விட்டு வீடு திரும்பும் போது விபத்து, ஒருவர் உயிரிழந்தார்

லிப்பிஸ், ஜூன்.02-

நான்கு நண்பர்களும் உணவருந்தி விட்டு தத்தம் மோட்டார் சைக்கிகளில் தொடரணியாக கொன்வோய் முறையில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது, மோட்டார் சைக்கிள்களுக்கு இடையே உரசல் ஏற்பட்டு ஒருவர் கீழே விழுந்த போது, எம்பிவி வாகனத்தினால் மோதப்பட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் ஜோகூர், லிப்பிஸில் லிங்காரான் தெங்கா உத்தாமா எனும் எல்டியு சாலையின் 55 ஆவது கிலோ மீட்டரில் இன்று அதிகாலை 12.10 மணியளவில் நிகழ்ந்தது.

இதில் லிப்பிஸ், பெஃல்டா செஙார் பெர்னாவைச் சேர்ந்த 31 வயது அமிருல் ஹாஸிக் அஸ்மி என்பவர் உயிரிழந்தார். 23 வயது எம்பிவி வாகனமோட்டி, கேமரன் மலையிலிருந்து குவாந்தானுக்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS