அலோர் ஸ்டார், ஜூன்.02-
காலியாகியுள்ள இரண்டு அமைச்சர்கள் பதவி உடனடியாக நிரப்பட வேண்டும் என்று கெராக்கான் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது.
ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ராஜினாமா செய்துள்ள முறையே பொருளாதார அமைச்சு மற்றும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் நிரப்பப்பட வேண்டும் என்று கெராக்கான் பொதுச் செயலாளர் வோங் சியா ஸேன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைக் கேட்டுக் கொண்டார்.
இம்மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களைக் கூட்டத் தொடரில் 13 ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே காலியாக உள்ள இரு அமைச்சர்கள் பதவி நிரப்பட வேண்டும் என்று வோங் சியா ஸேன் வலியுறுத்தியுள்ளார்.