லைசென்ஸின்றி எரிவாயு விற்பனை, நால்வர் மீது குற்றச்சாட்டு

சிரம்பான், ஜூன்.03-

கடந்த மாதம், லைசென்ஸின்றி 1,200 கிலோகிராம் எடை கொண்ட திரவ பெட்ரோலிய எரிவாயுவை விற்பனை செய்து வந்ததாக ஒரு வெளிநாட்டவர் உட்பட நால்வர், இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

28 க்கும் 57 க்கு இடைப்பட்ட வயதுடைய அந்த நால்வரும் நீதிபதி முகமட் கமீல் நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மே 30 ஆ ம் தேதி மாலை 6.45 மணியளவில் சிரம்பான், ஜாலான் மந்தின், எஸ்ஆர் வேலி என்ற இடத்தில் எண் இடப்படாத ஒரு வளாகத்தில் இந்த நால்வரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS