16 வயது பையன் காணவில்லை, பொதுமக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்

கிள்ளான், ஜூன்.03-

16 வயது பையன் ஒருவன், கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பையனைக் கண்டுபிடிப்பதில் போலீசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கிள்ளானைச் சேர்ந்த ஆர். கேன்வின் என்ற அந்தப் பையன், கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பையனைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் 03-33762222 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS