தாப்பா, ஜூன்.03-
25 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த விரைவு பேருந்து, சாலையை விட்டு விலகி கால்வாயில் கவிழ்ந்தது.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 342.2 ஆவது கிலோ மீட்டரில் தாப்பா அருகில் நிகழ்ந்தது.
25 பயணிகளில் மூவர் காயமுற்றனர். நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனமோட்டிகள் உதவி செய்ததால் அனைவரும் பேருந்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
அந்த பேருந்து கோலாலம்பூர் திபிஎஸ் பேருந்து நிலையத்திலிருந்து பினாங்கை நோக்கி சென்று கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காயமுற்ற மூன்று பயணிகள் சிலிம் ரீவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பேருந்து ஓட்டுநர் கண் அயர்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.