கோலாலம்பூர், ஜூன்.03-
ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் ஶ்ரீ பமேலா லிங் காணாமல் போனது தொடர்பில் போலீசார் இதுவரையில் 49 பேரிடம் விசாரணை செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்வதாகக் கூறி சென்ற 42 வயது பெண்மணி பமேலா, மர்மமான முறையில் காணாமல் போனார்.
பமேலாவை இரண்டு வாகனங்களில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர் என்று கூறப்பட்டது. எனினும் அந்தப் பெண்மணி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும் இதுவரையில் எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.