கோலாலம்பூர், ஜூன்.03-
கோலாலம்பூர், டத்தாரான் மெர்டெகாவில் கடந்த மே 31 ஆம் தேதி நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஐந்து நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தக் கைகலப்பு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளைப் போலீசார் அடையாளம் கண்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
17 க்கும் 23 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும், விசாரணைக்கு ஏதுவாக வரும் ஜுன் 5 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக ஏசிபி சுலிஸ்மி அஃபெண்டி கூறினார்.