நலன் சார்ந்த தரப்பினரின் கருத்துக்குக் காத்திருக்கிறோம்

ஷா ஆலாம், ஜூன்.03-

சிலாங்கூர் மாநிலத்தில் மின் சிகரெட்டுகள் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக, அதன் நலன் சார்ந்த தரப்பினரின் கருத்துகளுக்காக மாநில அரசாங்கம் காத்திருப்பதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மின் சிகரெட் விற்பனையைத் தடை செய்வது தொடர்பில் சிலாங்கூர் அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

அதே வேளையில் இது தொடர்பாக தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பெறப்பட்டு, அவை ஆராயப்படும் என்று அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS