கோலாலம்பூர், ஜூன்.04-
ஆசிய நாடான தென் கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சியான, லிபரல் கட்சியைச் சேர்ந்த லீ ஜாய் மியுங் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா சார்பாக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
61 வயது லீ ஜாய் மியுங் வெற்றியானது, தென் கொரியாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனை என்று அன்வார் விவரித்தார். இது, கடுமையான அரசியல் போட்டி மற்றும் பொதுமக்களின் மதிப்பீட்டிற்கு உட்பட்ட ஒரு கட்டத்தைக் கடந்து வந்துள்ளது.
தென் கொரிய மக்கள் நாட்டின் பரிபாலனங்கள் மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் திக்கை நோக்கி குரல் கொடுத்துள்ளனர் என்று அன்வார் வர்ணித்தார்.