ஈப்போ, ஜூன்.04-
பேரா மாநில மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான தரவரிசை நிலையிலான பதவியேற்புச் சடங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் முன்னிலையில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் முதல் ஏஎஸ்பி எனப்படும் உதவி சீனியர் போலீஸ் அதிகாரிகள் வரை பதவி உயர்வுப் பயிற்சியின் முடிவுகளின்படி, 2023 ஆம் ஆண்டுக்கான திறன் அடிப்படையிலான பதவி உயர்வு வழங்கப்பட்டது.
Noor Fadzly Ahmad, Mohd Redha Pahlawi Abdul Malek, Zulkifli Ariffin, Hairuddin Hassan, Irma Afzaniza Ismail, யுவராஜா கணபதி, தேவேந்திர ராமன் ஜூலூ, Syed Khalis Syed Darus, Mohd Faidullah Siddek, சுந்தர் சேகரன், Chua Ping Thing, ஜெயன் சுப்ரமணியம், Mohd Zafril Kamarozaman மற்றும் வேலம்மால் கண்ணப்பன் ஆகியோர் ஏஎஸ்பி, பதவி உயர்வு பெற்றவர்களில் அடங்குவர்.
இவ்விழாவில் ஏசிபி Shafa’aton Abu Bakar, பேராக் போலீஸ் மேலாண்மைத் துறைத் தலைவர், ஏசிபி Lee King Chuan, போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர், ஏசிபி Amir Hussin, நேர்மை நெறிமுறை பிரிவு தலைவர் ஏசிபி டத்தின் ஶ்ரீ Halimahton Ahmad, குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவர் Supt. Sahimi Husin, போக்குவரத்து போலீஸ் புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர், Supt. Mohamad Sukardy Rangkut உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின், பதவி உயர்வு பெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளுக்குத் தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.