குவாந்தான், ஜூன்.04-
தேசிய சேவைப் பயிற்சியாளர்கள், துப்பாக்கிகளைக் கையாளும் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளனர். PLKN 3.0 பயிற்சியில் பங்கு கொண்ட குவாந்தான், கேம் வத்தானியா முகாமில் 257 பயிற்சியாளர்கள் இன்று தொடங்கி இரண்டு தினங்களுக்கு M16 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி, சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டுப் பற்று, தேசிய நலன், தன்னார்வ தொண்டுகள் முதலிய நற்பண்புகளை விதைக்கும் தேசியப் பயிற்சியில், துப்பாக்கியைக் கையாளும் திறனையும் கொண்டு இருக்க வேண்டும்.
எனவே அவர்களுக்கு M16 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தேசிய சேவைப் பயிற்சி இலாகாவின் செயலாக்கப் பிரிவு இயக்குநர் கொலோனல் மஸ்லிஸான் ஷைக் ஒஸ்மான் தெரிவித்தார்.