கோலாலம்பூர், ஜூன்.04-
ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்கு பலர், கிராமங்களுக்கு திரும்பத் தொடங்கியிருப்பதால் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோம்பாக் டோல் சாவடியை நோக்கி, சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்ட்ரோ வானொலி, போக்குவரத்து நிலவரங்கள் தொடர்பான தகவலில் தெரிவிக்கப்பட்டது.
நாளை வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து நெரிசல் மேலும் கடுமையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.