51 லட்சம் பெறுமானமுள்ள மின்னியல் சிகரெட்டுகள் பறிமுதல்

ஜார்ஜ்டவுன், ஜூன்.05-

அரச மலேசிய சுங்கத்துறையின் பினாங்கு கிளை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 51 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள மின் சிகரெட்டுகள் மற்றும் மின் சிகரெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.

அண்மையில் பட்டர்வொர்த் துறைமுகம் மற்றும் கிள்ளான் துறைமுகம் ஆகியவற்றில் சில கொள்கலன்கள் சோதனையிடப்பட்டு ஒரு சீனப் பிரஜை உட்பட மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் பெரிய கொள்ளளவில் மின் சிகரெட்டுகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் திரவ வகைகள் கைப்பற்றப்பட்டன.

இன்று பினாங்கில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அதன் இயக்குநர் ரொஹாய்ஸாட் அலி இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS