பாயான் லெப்பாஸ், ஜூன்.05-
பினாங்கு, பாயான் லெப்பாஸில் ஒரு அபார்ட்மெண்ட் அருகில் கார் நிறுத்தும் இடத்தில் மாது ஒருவரை மானபங்கம் செய்ததாகக் கூறப்படும் 24 வயது வெளிநாட்டவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாது, அந்த வெளிநாட்டவருடன் எதிர்த்துப் போராடும் காட்சி, அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த மாதுவை மானபங்கம் செய்து விட்டுத் தப்பிக்க முற்பட்ட அந்த வெளிநாட்டவர், பின்னர் பொதுமக்களால் வளைத்துப் பிடிக்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் 38 வயது மாது போலீசில் புகார் அளித்து இருப்பதாக ஜார்ஜ்டவுன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரோஸாக் முகமட் தெரிவித்தார்.