ஜார்ஜ்டவுன், ஜூன்.05-
மடானி வீட்டுடைமை ஊக்குவிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மடானி வீட்டுடைமைத் திட்டப் பிரச்சாரத்தின் கீழ் பினாங்கு மாநிலத்தில் குடியிருப்புகள் அல்லது வணிகக் கட்டடங்களை வாங்கும் இந்திய முஸ்லீம்களுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் மொத்த விலையில் 5 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படவிருக்கிறது.
பினாங்கில் இது போன்ற சொத்துடைமை விற்பனைக்கு ஓர் உந்தும் சக்தியாக இந்திய முஸ்லீம்களுக்கு இவ்வாண்டு ஜுன் முதல் தேதியிலிருந்து அடுத்த ஆண்டு மே 31 ஆம் தேதி வரை இந்த சலுகை விலையை வழங்கவிருப்பதாக மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.