தெங்கு ஸாஃப்ருல் விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை

கோலாலம்பூர், ஜூன்.05-

வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகிய விவகாரம், அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.

அதே வேளையில் தெங்கு ஸாஃப்ருல் அமைச்சராக பதவி வகிப்பது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்படவில்லை என்று ஃபாமி ஃபாட்சீல் உறுதிப்படுத்தினார்.

தெங்கு ஸாப்ருல் அம்னோவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் மற்றோர் அமைச்சர் பதவியைக் கோருவதற்கு அம்னோ அமைச்சர்கள் முன் வந்தார்களா? என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS