கோலாலம்பூர், ஜூன்.06-
நாளை சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் பெருமக்கள் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடவிருக்கும் வேளையில் இன்று நாட்டில் பிரதான நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போக்குவரத்து சுமூகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதல் மதியம் வரையில் போக்குவரத்து நெரிசல் இல்லை. ஆனால் கிழக்கு கரையோர நெடுஞ்சாலைகளில் மாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து சுமூகமாக இருந்த போதிலும் பீடோருக்கும், தாப்பாவிற்கும் இடையில் சற்று வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.