மலேசியத் தூதரின் மரியாதை நிமித்த வருகையை ஏற்றார் பிரதமர்

புத்ராஜெயா, ஜூன்.06-

அமெரிக்காவிற்கான மலேசியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள டான் ஶ்ரீ முகமட் ஷாருல் இக்ராம் யாகோப் இன்று மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை புத்ராஜெயாவில் சந்தித்தார்.

முகமட் ஷாருல், அமெரிக்கா, வாஷிங்டனில் தமது தூதரகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமரைச் சந்தித்து, வாழ்த்துகள் பெற்றார்.

அமெரிக்காவிற்கும், மலேசியாவிற்கும் இடையில் இரு வழி உறவை வலுப்படுத்துவதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து புதிய தூதரருக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

அதே வேளையில் தரமான மற்றும் உயர் தாக்கமிக்க முதலீட்டாளர்களை மலேசியாவிற்குக் கவரப்பட வேண்டிய அவசியம் குறித்தும் முகமட் ஷாருலுடன் அன்வார் விவாதித்தார்.

WATCH OUR LATEST NEWS