கோலாலம்பூர், ஜூன்.06-
அண்மையில் கோலாலம்பூர், டத்தாரான் மெர்டேக்காவில் இரு கும்பல்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் இந்த கைகலப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
முதல் நபர் புதன்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ஒரு கட்டட வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு நபர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.