கோலாலம்பூர், ஜூன்.06-
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பலர் கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டு இருப்பதால் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நெரிசல் கடுமையாகி, வாகனங்கள் மெதுவாக நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் அறிவித்துள்ளது.
கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை முன் கணிப்பை விட அதிகரித்துள்ளது. கிழக்குக் கரை மாநிலங்களுக்குச் செல்கின்றவர்கள், கோம்பாக்கிலிருந்து கெந்திங் செம்பா வரை கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.