புத்ராஜெயா, ஜூன்.07-
உணவு மற்றும் பானத்துறையில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு வணிகர்கள் சிறப்பு அனுமதிப் பெறாமல் மானிய விலையில் கிடைக்கும் திரவமய பெட்ரோலிய எரிவாயுவான எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்த அனுதிக்கப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாடு விதிமுறைகள் தொடர்பான திருத்தங்கள் வரும் அக்டோபர் மாதம் தீர்க்கமாக முடிவு செய்யப்படும் வரை இந்த அனுமதி அமலில் இருக்கும்.
சம்பந்தப்பட்ட வணிகர்கள் சிறப்பு அனுமதி பெறாமல் தொடர்ந்து மானிய விலையில் கிடைக்கும் திரவமயப் பெட்ரோலிய சிலிண்டர்களைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.