சபா தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகிறது ஜிஆர்எஸ்

தூவாரான், ஜூன்.07-

சபா மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தேர்தலை எதிர்கொள்வதற்கு சபா மக்கள் கூட்டணியான ஜிஆர்எஸ் முழுமையாகத் தயாராகி வருவதாக அந்தக் கூட்டணியின் தலைவரும், சபா முதலமைச்சருமான ஹாஜிஜி நோர் அறிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக, ஜிஆர்எஸ் கூட்டணியின் தேர்தல் கேந்திரத்தை வலுப்படுத்த அதன் தொகுதிகள் முழுவதும் தொடர் பயிற்சி அமர்வுகளை நடத்தியுள்ளதாக ஹாஜிஜி நோர் கூறினார்.

இருப்பினும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்குள் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் நடத்தப்படவில்லை என்று அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS