கோலாலம்பூர், ஜூன்.07-
பூச்சோங்கில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த நான்கு டிரெய்லர்களில் ஏற்பட்ட பயங்கரத் தீ , பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் முழுமையாக அணைக்கப்பட்டது.
நேற்று இரவு 9.48 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டதைத் தொடர்ந்து சைபர்ஜெயா, பூச்சோங் மற்றும் ஸ்ரீ கெம்பங்கான் நிலையங்களைச் சேர்ந்த மொத்தம் 25 தீயணைப்பு வீரர்கள், பூச்சோங்கில் உள்ள ஜாலான் உத்தாமா டி அல்பினியா, பூச்சோங் என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டிரெய்லர்கள் 95 சதவீதம் எரிந்து விட்டதாகவும், அந்த டிரெய்லர்களின் பதிவு எண்ணை புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காண முடியவில்லை எனவும் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.