கிள்ளான், ஜூன்.08-
கிள்ளான், தஞ்சோங் ஹராப்பான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன கணவன், மனைவி சடலங்கள் இன்று மீட்கப்பட்டன. கிளேங் உத்தாமாவைச் சேர்ந்த 32 வயது கான் ஹொன் தாட், அவரது 29 வயது மனைவி கெரின் மான் ஆகியோரின் சடலங்கள் இன்று காலை 7.42 மணியளவில் நோர்த்போர்ட்டில் இருந்து சுமார் 0.1 கடல் மைல் தொலைவில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகத் மலேசிய கடல்சார் நிறுவனத்தின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவு அதிகாரி, முகமட் ஷாஃபிக் சஸாலி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்தில், ஏற்கெனவே மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் படகில் இருந்த ஆறு பேரும் பாதுகாப்பு அங்கிகள் அணியவில்லை என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.