ஜார்ஜ்டவுன், ஜூன்.08-
பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், தனது குரலையும் உருவத்தையும் போலியாகப் பயன்படுத்தி முதலீட்டு மோசடிகளுக்குப் பரப்பப்படும் போலி ஏஐ காணொளிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காணொளியில் தான் முதலீட்டுத் திட்டங்களை ஆதரிப்பதாகக் காட்டப்பட்டதாகவும், ஆனால் அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலி காணொளி என்றும் லிம் தெளிவுபடுத்தினார்.
தான் ஒரு போதும் எந்தவொரு முதலீட்டிலும் ஈடுபடுமாறு யாரையும் கேட்கவில்லை என்றும், தான் அரசியலில் மட்டுமே ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் இத்தகைய மோசடி காணொளிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அவர், இது குறித்து மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.