206 பேர் கலந்து கொள்ளவில்லை

ஜெலி, ஜூன்.08-

உடல்நலக் காரணங்களாலும் வேலை காரணமாகவும் தேசிய சேவை பயிற்சித் திட்டம் பிஎல்கேஎன் 3.0-இல் 206 பேர், தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தேசிய சேவை சட்டம் 2003-இன் கீழ் அவர்கள் அனைவரும் கட்டுப்பட்டுள்ளதாக தற்காப்புத் துணை அமைச்சர் அட்லி ஸாஹாரி கூறினார்.

சரியான காரணமின்றி கலந்து கொள்லத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், அவர்கள் அளித்த காரணங்கள் முழுமையாக ஆராயப்படும் என்றார். தேவைப்பட்டால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS