கோலாலம்பூர், ஜூன்.09-
எல்ஆர்டி ரயில் சேவை, கால தாமதமானதற்கு மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறே காரணமாகும் என்று அந்த பிரதான ரயில் சேவையை வழிநடத்தி வரும் ரெபிட் ரேய்ல் செண்டிரியான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்ஆர்டி ரயில் சேவை, காலை 5.30 மணியிலிருந்து ஏற்பட்டதாக அது குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக பசார் செனி, பெங்க் ரக்யாட் எல்ஆர்டி ரயில் நிலையங்களின் சேவை பாதிக்கப்பட்டதாக அது அறிவித்துள்ளது.