கோலாலம்பூர், ஜூன்.09-
உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் விபத்தில் மரணமுற்ற துயரச் சம்பவத்திற்குத் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
அறிவார்ந்த மாணவர்கள், இந்த விபத்தில் உயிரிழந்து இருப்பது, தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்திற்கு மாபெரும் இழப்பாகும் என்று டத்தோ ஃபாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.