கோலாலம்பூர், ஜூன்.09-
உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் உட்பட 15 பேர் மரணம் அடைந்த சம்பவத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகளை நல்கும்படி உயர்க்கல்விக் கூட அமைச்சுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
ஓர் இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது, அவசரம் காட்டக்கூடாது. இந்தத் துயரச் சம்பவத்தை ஒரு படிப்பிணையாகக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.