ஈப்போ, ஜூன்.09-
பொய்யான முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 57 வயது மாது, தனது வாழ்நாள் சேமிப்புப் பணமான 6 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி வாட்ஸ்அப்பில் வெளியிடப்பட்ட, குறுகிய காலத்தில் கொழுத்தப் பணம் என்ற விளம்பரத்தை நம்பி, அந்த மாது 6 லட்சம் ரிங்கிட்டைக் கட்டம் கட்டமாக முதலீடு செய்துள்ளார்.
முதலில் 14 ஆயிரம் ரிங்கிட்டை அவர் முதலீடு செய்துள்ளார். அதற்கு லாப ஈவாக ஆயிரம் ரிங்கிட் ரொக்கம், அவரின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
பின்னர் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதிக்கும் ஜுன் 4 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலக் கட்டத் வங்கியின் 28 பண பரிமாற்றம் மூலம் 6 லட்சம் ரிங்கிட்டை அந்த மாது முதலீடாக செலுத்தியுள்ளார்.
லாப ஈவு கிடைக்கும் என்று நம்பியிருந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த 6 லட்சம் ரிங்கிட்டும் திரும்பக் கிடைக்கவில்லை. தாம், மோசம் போனது குறித்து அந்த மாது போலீசில் புகார் செய்து இருப்பதாக யஹாயா ஒத்மான் குறிப்பிட்டார்.