ஜார்ஜ்டவுன், ஜூன்.09-
பினாங்கில் வீடுகளை வாங்க விரும்பும் இந்திய முஸ்லீம் சமூகத்தினருக்கு 5 விழுக்காடு கழிவை வழங்கும் மாநில அரசாங்கத்தின் திட்டத்தை, மாநிலத்தில் உள்ள இதர சமுகத்தினருக்கும் விரிவுப்படுத்தவது குறித்து மாநில அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கில் குறிப்பாக விற்கப்படாமல் இருக்கும் வீடுகள் மற்றும் வர்த்தகக் கட்டங்களை வாங்க விரும்பும் அனைத்து இனத்தவர்களுக்கும் சிறப்புக் கழிவுகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தாங்கள் பெற்று இருப்பதாக சோவ் கோன் யோவ் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் இந்த உத்தேச ஆலோசனையை மாநில அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று அவர் விளக்கினார்.