போலந்துடன் ஒத்துழைப்பு கொள்ள மலேசியா உறுதி

புத்ராஜெயா, ஜூன்.10-

உயர்க் கல்வி, கலாச்சாரம், உலகளாவிய பாதுகாப்பு ஆகிய துறைகளில் அணுக்கமாக ஒத்துழைப்பு கொள்வது குறித்து மலேசியாவும், போலந்தும் உறுதி பூண்டுள்ளன.

போலந்து அதிபர் ஆன்ரே டுடாவின் அதிகாரப்பூர்வ மலேசிய வருகையையொட்டி இரு நாடுகளும் இந்த உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளன.

புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் போலந்து அதிபர் சந்திப்பு நடத்திய பின்னர் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட துறைகளில் அணுக்கமான ஒத்துழைப்பு கொள்வது குறித்து அவை உறுதி பூண்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS