சந்திரமுகி படத்தில் முதலில் தேர்வான வேறொரு நடிகை

திரைப்படங்களில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள நடிகை சிம்ரன் அண்மையில் குட் பேட் அக்லி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சந்திரமுகி படத்தில் முதலில் தேர்வானது இவர் தான் என்று கூறப்பட்ட விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ” சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான். ஆனால், என் குடும்பத்திற்காக அப்போது அந்த படத்தில் இருந்து விலகினேன். இதனால், ரஜினி சாருடண் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். ஆனால், பின்பு அந்த வாய்ப்பு பேட்ட திரைப்படம் மூலம் நிறைவேறியது” என்று சிம்ரன் தெரிவித்தார்.   

WATCH OUR LATEST NEWS