ஜெய்ப்பூர், ஜூன்.10-
ராஜஸ்தானில் ஆற்றில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிலர் சுற்றுலாவாக டோங்க் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அதில் 25 – 30 வயது மதிக்கத்தக்க 11 பேர், அங்குள்ள பனாஸ் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில், அவர்கள் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் அங்கு விரைந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். அதில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் எப்படி ஆற்றில் மூழ்கினர் என தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.