கோம்பாக், ஜூன். 06-
தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியில் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் பேருந்து விபத்தில் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து விரைவு பேருந்து ஓட்டுநர்களுக்கு எதிராக இன்று அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோலாலம்பூர், கோம்பாக் டோல் சாவடியில் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே நடத்திய சோதனையில் ஒரு பேருந்து ஓட்டுநர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
பேரா, லுமூட்டிலிருந்து திரெங்கானு, கெமாமானை நோக்கி சென்றுச் கொண்டிருந்த அந்த பேருந்து ஓட்டுநர், தடுக்கப்பட்டு, சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் ஜேபிஜேவின் இயக்குநர் ஹமிடி அடாம் தெரிவித்தார்.
இந்தா சோதனையின் போது 620 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 60 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.