சாலை மோசமாக இருந்ததா? உண்மையில்லை

ஈப்போ, ஜூன்.10-

உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்து நடந்த சாலைப் பகுதி, மிக மோசமாக இருந்ததாகக் கூறப்படுவதை போக்குவரத்துத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் மறுத்தார்.

ஜெலி-கெரிக்கை இணைக்கும் கிழக்கு மேற்கு சாலையில் கடந்த ஜுன் 6 ஆம் தேதி ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணியின் போது அந்தச் சாலை நன்றாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மிக மோசமாக இருந்ததால், பேருந்தின் டயர் வெடித்து அது கவிழ்ந்தது என்று சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற நபர்கள் பகிர்ந்து வரும் வதந்தியில் உண்மையில்லை என்று அஹ்மாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS