கோலாலம்பூர், ஜூன்.10-
ஆசியான் தலைமையின் கீழ் ஒரு மைல் கல் நடவடிக்கையாக, மலேசியா தனது முதன்மையான தேசிய பயிற்சி வாரத்தை முதல் முறையாக அனைத்து ஆசியான் மக்களுக்கும் திறக்கவிருக்கிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.
இது நாடு முழுவதும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பயிற்சி வாய்ப்புகளை வரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைனில் வழங்குவிருக்கிறது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் மனித மூலதன மேம்பாட்டு முதலீட்டு கருத்தரங்கின் பேசிய ஸ்டீவன் சிம், தேசிய பயிற்சி வாரம் என்பது ஆசியான் திறன் ஆண்டு என்ற கருப்பொருளில் மலேசியா தலைமையின் கீழ் ஒரு முக்கியப் பயிற்சியாகும். இது பிராந்திய தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான ஒரு வருட கால உறுதிப்பாடாகும் என்று ஸ்டீவன் சிம் விவரித்தார்.
இந்த ஆண்டு தேசிய பயிற்சி வாரம், ஆசியானில் மிகப் பெரிய மாற்றத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த பயிற்சியானது AI, டிஜிட்டல் மாற்றம், பசுமை தொழில்நுட்பங்கள், தலைமைத்துவம் மற்றும் மென்திறன்கள் ஆகியவற்றின் படிப்புகளுக்கான இலவச அணுகலாக அமைந்து இருக்கும் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.
இந்த பயிற்சியானது, மனிதவள மேம்பாட்டுக் கழகமான HRD Corp. புடன் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.