பேருந்து நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டது

கோலாலம்பூர், ஜூன்.11-

15 மாணவர்கள் உயிரிழந்த விபத்துக்குக் காரணமான பேருந்தை வழிநடத்திய நிறுவனத்தின் போக்குவரத்து பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

நிறுவனத்தின் பெர்மிட் மீட்டுக் கொள்ளப்பட்டது, உடனடியாக அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம், தனக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிக்கான பெர்மிட்டை மூன்றாம் தரப்பினருக்கு குத்தகைக்கு வழங்கியது, ஜிபிஎஸ் முறையைச் செயல்படுத்தத் தவறியது உட்பட் பல்வேறு நிபந்தனைகளை மீறியதற்காக அந்த நிறுவனத்தின் பெர்மிட் பறிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் அறிவித்தார்.

இது தொடர்பான உத்தரவு, தரை பொது போக்குவரத்து அமலாக்கத் துறையான அபாட் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS