26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றனர்: 2 நிறுவன இயக்குநர்கள் உட்பட மூவர் கைது

புத்ராஜெயா, ஜூன்.11-

26 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நிறுவனத்தின் இரண்டு இயக்குநர்கள் மற்றும் வங்கி ஒன்றின் சில்லரை வர்த்தக முன்னாள் ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த மூவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்து, தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்கு புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தியது.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஒரு பெண் உட்பட மூவரையும் வரும் ஜுன் 15 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

WATCH OUR LATEST NEWS