கோலாலம்பூர், ஜூன்.12-
விரைவு பேருந்து ஓட்டுநர்கள், தங்கள் சேவையைத் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் கட்டாயமாக சிறுநீர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது பரிந்துரை செய்துள்ளார்.
பேருந்து ஓட்டுநர்கள், போதைப் பொருள் உட்கொண்டுள்ளார்களா? என்பதை உறுதிச் செய்வதற்கு இது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
பேரா மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு விபத்துகளில் மொத்தம் 24 பேர் உயிரழந்திருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் துன் மகாதீர் மேற்கண்ட பரிந்துரையை முன்வைத்தார்.