ஷா ஆலாம், ஜூன்.12-
சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் டபள்யூசிஇ எனப்படும் மேற்கு கடலோர விரைவு நெடுஞ்சாலையின் செக்ஷன் 2 இல் இன்று பின்னிரவு முதல் டோல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
எஸ்கேவிஇ எனப்படும் லெபுராயா லெம்பா கிளாங் செலாத்தான் அடுக்குச் சாலையின் கெசாஸ் மற்றும் பந்திங் அடுக்கு சாலையின் சாலை சந்திப்பு ஆகியவற்றில் பின்னிரவு 12.01 மணி முதல் டோல் கட்டணம் விதிக்கப்படும் என்று டபள்யூசிஇ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செக்ஷன் 2 என்பது 7.2 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட பாதையாகும்.