பாதசாரியின் உடல் மீட்கப்பட்டது

கோலாலம்பூர், ஜூன்.14-

கோலாலம்பூர், கெப்போங் சாலை வட்டத்தில் காரினால் மோதப்பட்டு ஆற்றில் தூக்கி எறியப்பட்ட பாதசாரி ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த ஆடவரின் உடல் இன்று காலை 7.30 மணிக்குக் கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸம்ஸூரி முகமட் இசா தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS