புத்ராஜெயா, ஜூன்.16-
அண்மையில் திரெங்கானுவில் உள்ள ஒரு பள்ளியில் இரு மாணவர்கள் கைகலப்பில் ஈடுபட்ட விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடெக் கேட்டுக் கொண்டார்.
கைகலப்பில் ஈடுபட்ட இரு மாணவர்களில் ஒருவரின் தாயார் தமக்கு மிக நெருக்கமானவர் என்று அவதூறுத் தன்மையில் தீய நோக்கத்துடன் பகிரப்பட்டு வரும் தகவல் உண்மை அல்ல என்று அமைச்சர் விளக்கினார்.
அந்த மாது தமக்கு அறிமுகம் இல்லை என்று ஃபாட்லீனா தெளிவுபடுத்தினார்.