கோலாலம்பூர், ஜூன்.17-
இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகியது திட்டவட்டமான ஒன்றாகும் என்று அதன் முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தாம் எடுத்துள்ள முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்ட போதிலும் தாம் எடுத்த முடிவு தீர்க்கமானதாகும் என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான நிக் நஸ்மி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளத் தவறியதைத் தொடர்ந்து நிக் நஸ்மி பதவி விலகுவதாக அறிவித்தார்.