கோலாலம்பூர், ஜூன்.18-
மஇகா முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலின் மறைவையொட்டி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தமது வருத்தத்தையும், அவரின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
கோலாலம்பூர், பங்சாரில் உள்ள டத்தோஸ்ரீ பழனிவேலின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரின் உடலைத் தாங்கிய பிரேதப் பெட்டியில் மலர் மாலை சாற்றி, டத்தோஸ்ரீ சரவணன் இறுதி மரியாதை செலுத்தினார்.
அத்துடன், டத்தோஸ்ரீ பழனிவேலின் துணைவியார் டத்தின்ஸ்ரீ கனகத்திற்கு சரவணன் ஆறுதல் கூறினார்.