கோலாலம்பூர், ஜூன்.19-
எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்த மாணவர்களில் 62 ஆயிரத்து 485 பேருக்கு போலிடெக்னிக் மற்றும் காலேஜ் கொமுனிடி கல்லூரிகளில் இடம் கிடைத்து இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
யுபியு ஓன்லைன் மூலமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களில் மேற்கண்ட எண்ணிக்கையைக் கொண்ட மாணவர்கள், 2025/2026 கல்வித் தவணைக் காலத்திற்கான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் அடிப்படையிலான பயிற்சியைப் பெறுவர் என்று அது குறிப்பிட்டுள்ளது.
இந்த மாணவர்களில் 2 ஆயிரத்து 288 பேர், 10 போலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் தொழில்நுட்பத்தில், அடிப்படை பயிற்சியைப் பெறுவர் என்று உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.