ராக்கான் மூடா திட்டத்தில் அமைச்சர் ஹன்னா இயோ

புஞ்சாக் ஆலாம், ஜூன்.19-

ஷா ஆலாம், புஞ்சாக் ஆலாமில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், சிலாங்கூர் மாநில வளாகத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான நான்காவது தொடரான ராக்கான் மூடா துருன் கம்புஸ் திட்டத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ரஸ்மான் மூடா துருன் கம்புஸ் திட்டம் என்பது உயர்கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்கள், நாட்டில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்த தங்கள் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் தலைமைத்துவத்திற்கு நேரடியாகத் தெரிவிக்க உதவும் ஒரு சிறப்புத் திட்டமாகும்.

இளையோர்களின் கருத்துக்களைக் கேட்பது, அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் தேசிய வளர்ச்சிக்கு நேரடியாக பங்களிக்க அவர்களுக்கு இடம் வழங்குவது முதலியவற்றை இத்திட்டம் வலியுறுத்துகிறது.

உயர்கல்விக்கூடங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்களை ஈர்க்கும் வகையில் மொத்தம் 10 ராக்கான் மூடா துருன் கம்புஸ் திட்டங்களை இந்த ஆண்டு செயல்படுத்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு நோக்கம் கொண்டுள்ளதாக அமைச்சர் ஹான்னா இயோ இந்நிகழ்வில் விளக்கினார்.

இந்நிகழ்வின் போது யுஐடிஎம் பல்கலைக்கழக மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் ஹான்னா இயோ பதில் அளித்தார்.

WATCH OUR LATEST NEWS