மகளைச் சித்ரவதை செய்து வந்த பெற்றோர் கைது

ஆராவ், ஜூன்.19-

தங்களின் 11 வயது மகளை கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் அந்தப் பெண்ணின் தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவனையும், மனைவியையும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெர்லிஸ், ஆராவில் உள்ள அவர்களின் வீட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.

37 வயதுடைய இருவருக்கும் எதிராக பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அத்தம்பதியரைப் போலீசார் கைது செய்துள்ளதாக ஆராவ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் மோஹ்சின் முகமட் ரொடி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS